Monday 16 September 2013

காற்றின் சிறகுகளை விரித்து 
கம்பியில் இசைசெய்கிறேன் 
உருகிவழிகிறது இசை உள்ளிருந்து 
இயக்குகிறது உந்தன்மீதான நினைவுகள்
பிடித்தவிரல்களின் அழுத்தத்தில்
பீறிடுகிறது ஸ்வரங்கள்
ஏற்ற இறக்கங்களில் பயணிக்கயில்
சொக்குகின்றது மனமும் சார்ந்த உடலும்
இவ்வுலகில் இருந்து எங்கெங்கோ
இழுத்துச்செல்கின்றது
இசைபிரவாகம் காற்றில் மிதந்தபடி,,,,,

No comments:

Post a Comment