Thursday, 30 October 2014

    சுயங்களை தொலைத்த

    வனப்பிரதேசங்களில்

    ஈரங்களை தேடியபடி

    அலைகிறதுகாற்றாய் மனது

    கொன்று...
    புதைக்கப்பட்டிருக்கும்

    முதுமரங்களின் வேர்கள்

    அடியில் சுயவிலாசங்களைத்

    தேடுகிறது

    பச்சைவாசனை

    குருதிப்படிமங்களை

    நுகர்ந்தபடியே

    உறங்கிக்கிடக்கும்

    வன்மங்களைப் புதுப்பித்தவாறு

    இயல்பாய் வரும் பாவங்களின்

    முகமூடி அணிந்தவாறு

    மிதித்து உயிர்பறிக்கும்

    செயல்களுடன்

    என்றேனும் கனவுகளின்

    பிம்பங்களையாவது

    நேரில் கண்ணுரும் ஆவலுடன்........

No comments:

Post a Comment