ஒற்றைககடிதத்தில் உனது
உன் உள்ளத்தை உருக்கி
வரைந்திருக்கிறாய்
உணர்வுகளை
எழுத்துகளாக்கி
உயிர்தந்திருக்கிறாய்
கண்ணீரில் நனைத்து
வெப்பபெருமூச்சில் உலர்த்தி
உதிரத்தில் கையொப்பமிட்டு
மோகததை
முத்தங்களால் பதித்து
சோகங்களை மடித்து
அனுப்புகிறாய்
அத்தனையும்
உன்
இதழ்தரும்
ஒற்றை முத்ததிற்கு ஈடாகுமா...
உள்ளே என்னைசிறைவைத்து
உட்கார்ந்து காதல் செய்கிறாய்
உள்ளத்திற்குள் காதல்விதைத்து
உயிரைவளர்க்கிறாய்
உணர்வுப்படகில் பயணித்து
உயிரைக்கடக்கிறாய்
உனதுவிழி இதழ்களுக்குளே விழுந்துகிடக்கிறேன்
நான் விதைகளாக வீரியமுடன்
என்னை சிறை நீ வைப்பாயோ சிதறவிடுவாயோ
சீக்கிரம் சொல்லிவிடு செத்துமடியுமுன்னே
இருவரிகள் சேர்ந்தால் பிறக்கிறது கவிதை
இரு இதழ்கள்சேர்ந்தால் பிறக்கிறது இனிமை
கவிதையின் இதழ்களில் ஊடாடி
ஒளிந்திருக்கிறது காதல்விதை
நின்னைச்சரணடைதேன்
நீடுதுயில் கொள்ளும்வரை
உன்னில் உயிர்த்துப்போனேன்
உயிர்உள்ளுரையும்வரை
காதலாகிக்கசிந்துருகினேன்
கண்ணில் நீ நீராய் வழியும் வரை
என்னை நான் மாற்றிக்கொண்டிருக்கிறேன்
நீயாகவே
என் மனதைதேற்றிக்கொண்டிருக்கிறேன்
நிரந்தரமாகவே
எல்லாவற்றையும் எட்டிப்பார்க்கிறாய்
நிலைகண்ணாடியிலிருந்து......
நிழலாகவே ..........
தூக்கநேரங்கள் எல்லாம் துக்க நேரங்களாக
எண்ணும் நேரங்களெல்லாம் ஏக்கநேரங்களாக
விழிமூடும்போதல்லாம் ஈரங்களாக
நாம் இணையும் நேரம் மட்டுமே இயல்பாக....