Saturday 10 October 2015




என்னெப்பெத்த ஆத்தா
என்னபாடுபட்ட என்ன
வளக்குறதுக்கு
வெறும் டீயக்குடிச்சே
நாள்பூராம் கெடப்பியே
இப்போ எல்லாமே 
இங்கஇருக்குதேஆத்தா
நீ பக்கத்தில இல்லயே
நான் இங்கே நீ அங்க
எப்போவும் ஏமகன் ஏமகனு
பொலம்பிக்கிட்டு என்னப்
பாக்கத்துடிச்சிக்கிட்டு
வெளியசொல்லமுடியாம
மனசுக்குள்ளயே அழுகுறீயே
என்ன சண்ட நமக்குள்ள
தூக்கிப்போடு ஆத்தா
பட்டீணியா இருந்தப்ப 
இருந்தபாசம்பணம் கொஞ்சம் 
வந்தவன்னபோயிடுமா
பணம் வரும் போகும்
பாசம் போனா வருமா ஆத்தா....
தனியா ஒக்காந்து 
அழுகவைச்சிட்டயே
ஆத்தா,,,ஒன்ன பாக்கனுமே ஒடனே.
உன் மடியில் படுத்து
மனம் விட்டுஅழுகனும்.
உன் ஒருசொட்டு கண்ணீர்
என்மீதுபட்டு நான் 
மீண்டும்மகனாகனும்....

No comments:

Post a Comment