Saturday 10 October 2015

மண்பாண்டம் செஞ்சு
அதை சுல்லையில
வேகவைச்சு
அதை வித்தா வரகாசுலதான்
எங்க ஜீவனம்....
இதுல சமைச்சு சாப்பிட்டா
நோய் நொடி அண்டாது
உடம்புக்கும் நல்லது
ருசியும் அதிகமாகும்...
இப்போ களி மண்ணு
கிடைக்கிறதில்ல
கம்மாயெல்லாம் போச்சு
களிமண்ணும் போச்சு
சுல்ல வைக்க விறகு எரு
எங்கயும் கிடைக்கல
இனிமே இது அம்புட்டுத்தேன்
காப்பாத்த முடியாது
இவ்வளவு சிரமப்பட்டு
செஞ்சு வித்தா வெலபோகல
மண் பானை அருமை தெரியாம
வெலகேக்குறாங்க....
நல்லத த்தான் மதிக்குற
பழக்கம் நமக்கில்லயே
நீங்க புரிஞ்சி தேடும்போது
நாங்க மண்ணுக்குள்ள
போயிருப்போம்.......

No comments:

Post a Comment