Sunday 11 October 2015

நான் மழைமேகம் 
உன்மீதன்பைப்பொழிய
உந்தன்அனுமதி
தேவையில்லை
நானுன் சுவாசக்காற்று
உன்னுள்புகுந்துவர 
எனக்குத்தடையில்லை
நான்நீராக உன்னுள்
உறைந்துகிடக்கிறேன்
ஒவ்வொருஅணுவிலும்
நான் வெப்பம்
உனதுயிரைஉறையாது
பார்த்துக்கொள்கிறேன்
எனக்குத்தெரியும்
உன்மெளனம் சம்மதமென்று
அதனால்தான் உன்னுளிருக்கிறேன்
உன் உயிராய்.......என்றும்.....

No comments:

Post a Comment