Saturday 10 October 2015

உன் நிழல்களால் வளர்க்கப்பட்டு
உன் நிஜங்களால்
நிராகரிக்கப்படும்போது 
நிலைகுலைகிறேன்
நீர்குமிழாக 
நீர் குமிழுக்குள் காற்றாக
உன் சிரிப்பில் 
சிறைப்படுகிறேன்
என்னை வேரருக்கிறாய்
மாறும் முகபாவங்களால் 
மனம் மயக்குகிறாய்
அடிமை என சொல்லியே
அடிமை ஆக்குறாய் 
அழகின் சிரிப்பாக 
ஆளுமைசெய்கிறாய்.....
கண்களால் கைதுசெய்கிறாய்
இமைச்சிறைக்குள் 
இருத்திப்பார்க்கிறாய் 
இதயஅறைக்குள் அடைத்து 
இம்சைசெய்கிறாய்
நான் ஆயுள் தண்டணைக்கைதியா
இல்லை 
சந்தேகத்தின்பேரில்
விசாரணைக்கைதியா ....
சொல்லிவிடு....
விடுதலை செய்துவிடாதே
ஆயுள் தண்டனைக்குஆவல்
விசாரணை கைதியாக 
ஆயுள்முழுவதும் பரவாயில்லை
விடுதலை மட்டும் செய்துவிடாதே
விழுந்துவிடுவேன் நான்
மறந்து அல்ல
இறந்து...........

No comments:

Post a Comment