Sunday 11 October 2015

அகதியானபோதுகூட
அழவில்லை நீ
சகதியில் கிடந்தபோது
நான் புதைந்துபொனேன்
காலையில் குடித்தபால்
கடைவாயில் காயவில்லை
இடுப்பில் இருந்ததடம்
இன்னும் அழியவில்லை
பசிக்காகக் கடல் நீர்
குடித்தாயோ கடல்
தன் பசிக்கு 
உன் உயிர்குடித்ததோ
உன் எச்சில் ஈரமக்கியது
கடல் மண்ணை
ரணமாக்கி துடிக்கின்றன
காணும் கண்கள்....

No comments:

Post a Comment