Saturday 10 October 2015

ஆதலால் காத்திருக்கிறேன்......
---------------------------------------------------
உன் காதலுக்காக கைகளையேந்தி
கண்களால் இறைஞ்சி
உடல் கூனிவெட்கம் துறந்து
உன் கடைக்கண்ணாவது
திரும்பாதா என்று
விழிகளால் தொடர்ந்தபடி
ஆனால் நீயோ 
தவிர்த்தலயே தாரகமந்திரமாக
வைத்திருக்கிறாய்
விழிகளைஎன்மீது
விழாமல் கவனமாகக்
கட்டிவைத்திருக்கிறாய்
உன் நிழல்கூட எதிர்திசையில்
விழும்படியே நகர்கிறாய்
பேச்சில்கூட பெயர்
தவிர்க்கிறாய்.....
இருந்தாலும் 
நான் காத்திருக்கிறேன்
ஐம்புலன்களையும்
உன்னைநோக்கியே
தவமாகதவமிருந்தபடியே
நீ வருவாய் என்று நம்புகிறேன்
ஆதலால் காத்திருக்கிறேன்......

No comments:

Post a Comment