Saturday 10 October 2015





சுருண்டுகிடக்கிறதுமனிதம் 
காதைஅடைக்கும்பசியால்
செய்வதறியாது
திகைக்கிறதுபாசம் 
பணம் கைவிட்டதால்
வேடிக்கை பார்க்கிறது
உலகம் கைகொடுக்காமல்
ஆதரவைப்பற்றிக்
கவலைப்படாமல்
அரசியல் பேசுகிறதுகட்சிகள்
ஆட்சிபிடிக்கும்வேகத்தில்
நீதி-மன்றம் தடைசெய்கிறது
பிச்சையை -இடையூறாம்
ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சிகட்டுரைகள் 
சமர்ப்பித்து பட்டம்வாங்குகிறார்கள்
மாணவர்கள் கண்டனஆர்பாட்டம்
செய்து ஊடகத்தில் 
முகம் காட்டுகிறார்கள்
எல்லாம் நடந்துமுடிந்தபின்
இலைகளாவது விழாதா
எஞ்சிய உணவையாவது
உண்ணலாமென்று
காத்திருக்கிறார்கள்
இந்தக்குழந்தைகள்பசியோடு....

No comments:

Post a Comment