Sunday 11 October 2015

கீதையும் இசைபோதையும் 
பாரதக்காதையும் நல்பாதையும் 
மாதவனும் போதகனும்
கள்வனும் நிறைசெல்வனும் 
நியாயமும் அநியாயாயமும் 
உண்மையும் பொய்மையும் 
காப்பவனும் அழிப்பவனும்
தருபவனும் பெறுபவனும் 
ஆள்பவனும் ஆளப்படுபவனும் 
இன்பமும் துன்பமும் 
பசியும் உணவும்
வெளிச்சமும் இருளும்
போரும் சமாதானமும்
கூடுதலும் பிரிவும்
அறியாமையும் அறிவும்
வெப்பமும் குளிரும்
இனிப்பும் கசப்பும்
ஆணும் பெண்ணும்
இளமையும் முதுமையும்
யாதும் நீயே கண்ணா........
எங்கும் உன் ஒளிவண்ணம் கண்ணா

No comments:

Post a Comment