Sunday 11 October 2015

வாழ்க்கையத்தள்ள
வண்டியத்தள்ளித்தான் ஆகனும்
முடியலனாலும்
மூச்சுமுட்டினாலும்
மூச்சுஇருக்கனும்நா
கஸ்டப்பட்டுதான் ஆகனும்
விடியல்ல எந்திரிச்சு
இருட்டுறவரைக்கும்
அள்ளிகொண்டுபோய்
சேக்கனும்வெயிலுபாக்காம
மழைபேஞ்சா மொத்தமா
போய்டும் கரைஞ்சு
சுட்டுஎடுக்குறவரைக்கும்
திக்கு திக்குனு இருக்கும்
சுட்டுவந்தாத்தான் செங்கலு
அதுவரைக்கும் மண்ணுதான்
பாதுகாக்கனும் 
நாமநனைஞ்சாலும் அது
நனையவிடக்கூடாது.....
நாமகாஞ்சாலும்...வயிறுகாஞ்சாலும்
இந்தமண்ணுதான் பொழப்பு
இல்லன்னா நாமதான் மண்ணு......

No comments:

Post a Comment