Sunday 11 October 2015

காலங்காத்தாலநாவிதர
வரச்சொல்லி 
கருப்பட்டிக்காப்பித்தண்ணிகுடுத்து
உபசரிச்சு 
மனைப்பலகையப்போட்டு
குடும்பத்துலஉள்ள
அத்தனைஆம்பளகளும்
குஞ்சுகுளுவாணிஉள்பட
அவருக்கு மரியாதைகுடுத்து
சம்மனம்போட்டு ஒக்காந்து
மத்தியானம் வர எல்லோரும்
முடிவெட்டி சவரம் பண்ணுவோம்
அக்குள் முடி எடுக்கும்போது
கூச்சமாஇருக்கும்
சிலநேரம் சின்னப்புள்ளைங்க
மிசினைபாத்து 
அழுக ஆரம்பிச்சிடும்
புடிங்கிட்டுஓடப்பாக்கும்
அதுகல அமுக்கிப்புடிச்சி
முடிவெட்டும்ப்போது
காயமாயிடும் அப்ப
சத்தமாகத்தி ஊரக்கூட்டிடும்
எல்லாம் வேடிக்கைபாத்து
சிரிச்சிகிண்டல் பண்ணுவாங்க
அச்சுவெல்லம்தந்து 
சமாதானபடுத்துவாங்க
மதியம் அவருக்கும்சேத்து
சாப்பாடுபோட்டு அனுப்புவாக
கூலியெல்லாம் தனியாகிடையாது
களத்துமெட்டுல வருசக்கூலியா
அஞ்சுமரக்கா நெல்லுதான்....
கட்டையிலபோறவரைக்கும்
அவர்கத்திதான் மேலபடும்......
இப்போபாத்தாலும் 
கிண்டல்பண்ணுவாரு
சந்தானமய்யா....அவர் புள்ளைக
ட்வுன்ல கடபோட்டாக...
அங்கெல்லாம் காசுகுடுத்தாத்தான்
வேலையாகும்.....அவுகளும்
முன்னேறனுமுல்ல........

No comments:

Post a Comment