Saturday 10 October 2015

கனவுத்திரையாய்
என்னை நீ
உருவாக்கி அதில்
காதல் சித்திரங்கள்
வரைகிறாய் 
வண்ணக்கலவைகளாக
பல எண்ணங்களைப்
பூசி மகிழ்கிறாய்
என்னையும் அதில் சேர்த்து
உன்அற்புத தூரிகை யில்
என் மேனியெங்கும் 
மெல்ல வருடுகிறாய்
ஆங்காங்கு பல
வண்ணங்களை தொட்டு
ஒவ்வொருஇடமும்
புதிதாக மாறுகிறது 
துடிக்கிறது துவலுகிறது
மீண்டும் அதில் நிறச்சேர்க்கை
செய்கிறாய் அழகாக 
வண்ணங்கள் மாறுகின்றன
என்னிடம் பொதிந்துகிடந்த
சின்ன சின்ன உணர்வுகளை
சில்லென தொடுவர்மம்செய்கிறாய்
ஆனால் தீயாகப்பற்றுகிறது
காதல் மேனியெங்கும்
என்னை எனக்க்கே
அறிமுகம் செய்கிறாய்
புதிதாக எனக்ககே நான்
உன்னையும் அதில் வரைந்து
வைகிறாய்..என்னை
எரித்தபடி...........

No comments:

Post a Comment