Saturday 10 October 2015

உடம்புல தோல்
சுருங்கித்தான் போச்சு
ஆனா அன்புசுருங்கல
நாடிநரம்பெல்லாம்
தளர்ந்துதான் கெடக்கு
ஆனா தளரவில்லைபிடிமானம்
ஒருகையும் காலும் 
விழுந்துபோச்சு
ஆனாஇதுவரவிழலநானும்
என் நம்பிக்கையும்
அந்தசாமிக்குத்தான்
நன்றிசொல்லனும்
இது இவளுக்கு ஆயிருந்தா
நான் என்ன செஞ்சிருப்பேன்னு
எனக்குசாப்புட குளிக்க
ஒன்னுக்குரெண்டுக்கு
போகக்க்கூட இவதான் கையும்
காலுமா இருக்கா
கண்ணுலதண்ணிவருது
இவளைப்பாத்தாலே
ஆனா என்கண்ணுலதண்ணி
பாத்தா இவ பதறிப்போவா
அதுநால அடக்கிகிறேன்
ஆனால் நான் சொன்ன சாமி
இந்தாநிக்குதே இவதான்.......

No comments:

Post a Comment