Saturday 10 October 2015




நிலாமுற்றத்தில்
தினமும் தனித்திருக்கும்
வேளைகளில்
ஒற்றைப்பறவையொன்று
கானம்பாடி
இரவுவணக்கம்சொல்லியபடி
பறந்துசெல்லும் அடர்இருளில்
அதன் அழகிய குரலில்
இரவுவணக்கம்
ஓர்அழகியல் அற்புதம்
என்னைதினமும் 
உறங்கவைக்கும்
அதன் குரல் அழகு கேட்டு
முகம் காணும் 
ஆவல் கொண்டேன்
நான் அவ்வளவு அழகான 
பறவையில்லை என்று
கூறிப்பறந்தது
அழகு மனம் சார்ந்ததுதான்
உன் குரலின் அழகே 
உன் அழகுதானென்றேன்
என் குரல்தான் என்முகம்
என்றுகூறிநகைத்தது
சரி அழகியகுரலே 
உன் முகமாகக்கொள்கிறேன்
இரவுப்பாடலை பாடிச்செல் என்றேன்
மறுபடியும் இனியகுரலால்
பாடிச்சென்றது அந்த
இனிய குரல்முகப்பறவை.......

No comments:

Post a Comment