Saturday 10 October 2015

துடைக்கும் 
விரல்களிருந்தால் 
துன்பமும் சுகமே 
ஆறுதல்சொல்ல
ஆளிருந்தால்
அழுகையும்
ஆனந்தமே
சாயத்தோளிருந்தால்
சோகமும் சுகமே
எல்லோருக்கும்
துடைக்கும் விரல்கள்
கிடைப்பதில்லை..
கிடைத்தாலும் 
நிலைப்பதில்லை
அதனால்தான்
விழிகள் வழிவதை
நிறுத்தமுடிவதில்லை
விழிகள் வழிவதாலே
மனபாரம் குறைகிறது
விம்மிஅழுவதாலே
இதயம் தொடந்துஇயங்குகிறது

No comments:

Post a Comment