Sunday 11 October 2015

மாலைநேரம் மலர்கள்
பல கூந்தலில்சூடி
மன்னவன் உன் வருகைக்காக
மாதவம் செய்து
காத்திருக்கிறேன்மயக்கத்துடன்
மலர்களின் வாசம்என்னை
மதிமயங்கச்செய்கிறது
மயக்குன் உன் எண்ணம்
மனதெல்லாம் வாசமாக
நிறைந்துகிடக்கிறது 
மன்னவன் உன் விரல்பட்டு
பூக்கக்காத்திருக்கின்றன
என் தேகமொட்டுக்கள்
அக்கினி அலைகளை
ஆங்காங்கு பற்றவைத்து
கொழுந்துவிட்டெரியச்செய்து
பின் அணைத்து மகிழ்விப்பதில்
மன்னன்நீ
உன் விளையாட்டுகளுக்காக
ஏங்கிக்கிடக்கிறது
என் தேகப்பூங்காவனம்
படபடத்துசிலிர்த்து......
விரைந்து வருவாயா என்
உயிர்குடித்து உயிர்கொடுக்கும்
உயிரான மன்னவனே........

No comments:

Post a Comment