Saturday 10 October 2015

நீயெல்லாம்
ஒருமனுசனாயா
புள்ளங்க வீட்டுலபசியில 
அழுதிட்டேதுடிச்சிட்டு
கிடக்குறது
ஒனக்குத்தெரியாதா
சம்பாதிக்கத்துப்பில்ல
ஏங்கிட்ட அரிசி
வாங்கியாறென்னு
காசவாங்கியாந்து
குடிச்சிப்புட்டு இப்புடி
தெருவில உளுந்து
கெடக்குறீயே
இதேபொழப்பா
வைச்சிருக்குற
போறவர்ற எடத்துலயெல்லாம்
தண்ணியபொட்டுட்டு
சண்டயப்பொடுற
வீட்டுல எங்ககாசு ஒளிச்சி
வைச்சாலும் எடுத்துட்டுப்போய்
குடிச்சிட்டுவந்துடற
நாளுபேருக்கு மத்தில
அசிங்கமா கெடக்குறீயெ
உன்ன மிதிச்சே
கொன்னா என்ன

No comments:

Post a Comment