Sunday 11 October 2015

ரஸனையின் இதழ்கள்
அழகானவை அதுதான்
மலருக்கு மணம்தருவது
மலரே கவிதைதான்
மணமும் கவிதைதான்
நல் மனமும் கவிதைதான்
மெல்லத்தலையசைத்து
ரசிப்பதுமோர் கவிதைதான்
மேனிகுலுங்கசிரித்து
ரஸிப்பதுவும்கவிதைதான்
சொல்லிரசிப்பதும் கவிதைதான்
அள்ளி முகர்வதும்கவிதைதான்
கிள்ளி சுவைப்பதும் கவிதைதான்
மல்லி மலர்வதும் கவிதைதான்
தள்ளிநின்று ரஸிப்பதும் கவிதைதான்
தடவி உணர்வதும் கவிதைதான்
கண்மூடிரசிப்பதும் கவிதைதான்
கண்கள் விரியரசிப்பதும் கவிதைதான்
உள்ளத்தைக்
கொள்ளையடிப்பதும்கவிதைதான்
அதை சொல்லாமல் சொல்வதும்
கவிதைதான்,,,,,,,

No comments:

Post a Comment