Sunday 11 October 2015

தினம் கூடையில
காய்கறிபழமொத்தக்கடயில
சரக்கெடுத்து 
தெருத்தெருவாகொண்டுவோய்
விப்பேன் நாள்பூராம்
அலைஞ்சிவித்தா
நாப்பது அம்பது நிக்கும்
வெங்காயம் இல்லாட்டி
சீசன் ல கொய்யா மாம்பழம்
அப்புறம் ஆப்பிள் சாத்துக்குடி
இப்புடிஎதுநாச்சும் யாவாரம்
பண்ணுவேன் மழகிழபேஞ்சா
பொழப்பு சிரிச்சுப்போகும்
வயிறுகாஞ்சுபோகும்
நம்மல நாமதான்
பாத்துக்கணும்
இன்னிக்கியாவாரம் நல்லா
நடக்க மலயடிகருப்பு
நீதான் பாத்துக்கணும் சாமி
இல்லனா பட்டினிதான்
கெடக்கனும்நானு/

No comments:

Post a Comment