Saturday 10 October 2015


    என் உடல்
    எரித்துக்களிக்கும்
    என்னுயிர் நீ.....

    வெட்கத்தை
    வீதியில்கொட்டுகிறாய்
    விரல்பட்டதும்....

    உம்மாகொடுக்கிறாய்
    சும்மா
    வெம்மாபடர்கிறது
    இதழ்களில்

    எட்டுமுறை இரவு
    வணக்கம் சொல்கிறாய்
    அதன்பின் எப்படியடா
    எனக்கு உறக்கம்.....

    தொட்டாலும் எரிகிறது தொடா
    விட்டாலும் எரிகிறது
    என்ன வித்தையாடா இது

    முகநூலில்
    அனுப்பியிருக்கிறேன்
    முத்தங்களை
    பகிர்ந்துவிடாதே
    பத்திரமாகதிருப்பிக்கொடு

    உன்பெயர் நிலவா
    இரவில்மட்டுமே
    இம்சைசெய்கிறாய்




     · 
    விரல்நுனியில்
    விதைத்துவைத்திருக்கிறாய்
    வித்தைகளை
    வருடியேவிதைக்கிறாய்காதல்
    விதைகளை

    காண ஆவல்கொண்டழைத்து
    வந்தவுடன் 
    ஏன்மூடிக்கொள்கிறாய்
    இருவிழகளை

    உன்னிடம்தொலைத்துவிட்டு
    எங்கேபோய்தேடுவேன்
    என் இதயத்தை......





     
    அனஸ்தீசியாஇல்லாமலே
    மயக்கம் வந்ததுமருத்துவருக்கு
    வருமானவரிச்சோதனை
    வாகனத்தைப்பார்த்ததும்.......


No comments:

Post a Comment