Saturday 10 October 2015

வெறகுசுல்லிபொறக்கி
அஞ்சாறு மைலு காட்டுலைருந்து
மிதிச்சி சைக்கிள்ள
கொண்டுவந்து 
பொரோட்டாகடையில
குடுத்தாகட்டுக்கு 20ரூவா
கெடைக்கும் கூடவே 
ஒருகிளாஸ் சாயாத்தண்ணி
குடுப்பாருகடக்காரரு
மழைபேஞ்சாகாட்டுக்கு
போகமுடியாதுவழுக்கும்
இதுலபாரஸ்ட்ரேஞ்சருக
பாடாப்படுத்துவாய்ங்க
நாங்ககீழகெடக்குற
பட்டுப்போனசுள்ளிதான்
பொறக்குவோம்
மரத்தைவெட்டுறமாகா
பாவிகளைவிட்டுப்புட்டு
எங்கலைத்தான் புடிப்பாங்க.
வயித்துப்பொழப்புக்கு
வேறவழியில்ல காடுதான்
எங்களை காப்பாத்துற தாயி
அதநாங்க அழிக்கமாட்டோம்......

No comments:

Post a Comment