Tuesday 28 July 2015







அ.ருகில் வந்துநின்று
ஆ.றுதலாகக்கைபிடித்து
இ.னிமை முத்தம் தருகிறாய்
ஈ.ரமான விழிகளைத்துடைத்து
உ.யிரைஉள்பதித்து
ஊ.க்கம்கொடுக்கும்வார்த்தைகளால்
எ.ன்னை ஆட்கொண்டு
ஏ.ழிசைமீட்டுகிறாய்
ஒ.வ்வொருவார்த்தையும்
ஓ.ங்காரமாக ஒலிக்கும் வண்ணம்
உயிரெழுத்தாக்கி
என்மெய்தீண்டி
தடுப்பு ஆயுதங்களை
செயலிழக்கச்செய்து
என்னை ஆட்கொள்ளுகிறாய்
கண்ணா என்னில்
நிறைந்துவழிகிறாய்......

No comments:

Post a Comment