Tuesday 28 July 2015

உழுதுகிடக்கு மண்ணு
மழையில்லாம
கட்டாமக்கெடக்குது
கடனு வெளைச்சலில்லாம
காஞ்சுகிடக்கு வயிறு
கஞ்சியில்லாம
தேஞ்சுகிடக்குவரப்ப
புல்லுகூடமுளைக்காம
கண்டகண்ட உரம்போடாம
தண்ணிகுறைவா
பண்றமாதிரி ஏதாவது
வெவசாயம்கண்டுபிடிங்கய்யா
இல்ல தண்ணிக்கி
ஏதாவது ஏற்பாடுபண்ணுங்க
விஞ்ஞானிகளே
அதைவிட்டுப்புட்டுட்டு
எங்களை காலிபண்ணுறமாதிரி
இறக்குமதி விதை
கொடுக்காதீங்க
ஏற்கனவே பலபேரு
விட்டுவிட்டுஓடிட்டாங்க
முடியாமகூலிவேலைக்கி
திருப்பூர் மும்பைன்னு
இருக்குறதக்காப்பாத்தினா
நீங்க பிற்காலத்துல
சாப்பிடலாம் வயத்துக்கு
இல்லன்னா செல்போன்லயும்
இண்டெர்னெட்லயும்
பசிக்குது நு பேசிட்டு
பசியோடபடுத்துக்கெடக்கலாம்
எப்படிவசதி நாங்க
கொஞ்சநாள் பொலம்பிட்டு
மண்ணுக்குள்ளேயே
போய்டுவோம்.
அப்போநீங்க..
அழுதுபொலம்புறதகேட்க
யாரும் இருக்கமாட்டாங்க

No comments:

Post a Comment