Tuesday 28 July 2015

துரத்துகின்றனஉன் நினைவுகள் 
பஞ்சபூதங்களாகஎன்னை
தொடர்ந்துவந்து
தூங்கவிடாமலே
தள்ளிவிடமுயலுகிறேன்
நீரைப்போல ஆனால்
சூழ்ந்துகொள்கின்றன
காற்றைப்போல் விலக்கமுடியாமலே
ஆகாயம்போல நான்
போகுமிடமெல்லாம்
தொடர்கின்றனவே
நெருப்பாக கனன்றுகொண்டு
மண்ணில் நான் சேரும்வரை
மாளாது உன் நினைவுகள்
கண்ணில் வந்து 
நீ நிற்கும் வரை.......

No comments:

Post a Comment