Tuesday 28 July 2015




தேடுதல்களில் தொலைகிறது
வாழ்க்கைஎனும்பயணம் 
தொலைத்தவையெல்லாம் 
தொலைத்தவையாகவே 
திரும்பக்கிடைக்காத 
சாபங்களுடன் 
ஏமாற்றங்களே வாழ்க்கையாகி
எதிலும் பற்றற்று 
விதி முடிதலை
விரைவில் தேடும் 
விளிம்பில் தொங்கும்
இறுதிக்கட்டத்தில் 
பற்றி மேலேஇழுக்கும் கரங்கள் 
பற்றினை பற்றவைக்கின்றன
விதியைப்பற்றிய 
மறுபரிசீலனைகள்தேடுதலில் 
பிழைத்துக்கொள்
என்று உன்னிடம் 
சொல்லத்தான் அனுப்பினான் 
உன்னைப்படைத்தவன் 
என்று செய்திசொல்லி மறைகிறது ..
இப்போது வாழ்ந்தே ஆவதற்கான 
சாத்தியக்க்கூறுகள் 
கிழக்கில் 
வெளுக்கத்தொடங்குகின்றன
அப்போது அம்மா என்றழைத்து 
வந்து கட்டிகொள்கிரது 
என் வாழ்வின் அர்த்தம்.......

No comments:

Post a Comment