Tuesday 28 July 2015







மெல்லிய நிலவொளி
இளம்தென்றல்காற்று
தோட்டத்தில் மலர்ந்திருக்கும்
கொடிமல்லியின் வாசம்
எங்கிருந்தோவரும்
ஓர் அம்மாவின் தாலாட்டு
உன் தோளில் சாய்ந்தபடி
உன் அரவணைப்பில்
என்மனமிகுந்தமகிழ்வுடன்,,,,,
வாய் மெளனமாய் 
இதயங்கள் மட்டும்
இனிமையாகபேசிக்கொண்டு
என் கூந்தல்கோதியபடி
உன் கைகள்
உன் கைகோர்த்து மார்பில்
சாய்ந்தபடி நான்
இதைத்ததான் வேண்டுகிறேன்
இதுபோதும் என் பிறப்பின்
பயன் அடைய வேறொன்றும்
வேண்டேன்பராபரமே.......

No comments:

Post a Comment