Tuesday 28 July 2015

அழகாய் பசுமையாய்
பச்சைக்குழந்தையாய்
பார்க்கும் பார்வையாய்
பரந்தவெளியாய்
விரிந்துகிடக்கும் அண்டமாய்
விழுந்துகொண்டிருக்கும் அருவியாய்
விழிகளாய்
விண்ணில் மேகமாய்
விரைந்து நீர்கேட்க்கும் தாகமாய்
வெளிச்சமாய்...வெளிச்சம் 
விரட்டிய இருளாய்
அனைத்தூயிர்களின் மேலும்
அருளாய் வாழ்வின் பொருளாய்
ஆதார இயக்கமாய் இருக்கும்
அமைதிதான் கடவுளின் வடிவம்

No comments:

Post a Comment