Tuesday 28 July 2015

நிரம்பிவழிகிறது 
மழைக்கால அணையில்
பொங்கிவரும் நீராக
உன் அன்புபிரவாகமாய்
நுரைபொங்கிஓடும்
ஆறாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது என்னை
இழுத்துக்கொண்டு
தேங்கிடந்தபோதுஉருவான
அத்துணை மலர்களையும்
இலைசெடிகொடிகளையும்
சேர்த்தே அழைத்துக்கொண்டு
குதூகலமாய்...கரைபுரண்டு
என் உடம்பின் உயிரின்
இதயத்தின் அத்துனை
செல்களிலும் உன்
குளிர்ச்சியை பரவவிட்டபடி
தினம்நான் மூழ்கிவிடுகிறேன்
உன் அன்புஆற்றுவெள்ளத்தில்
மூச்சுமுட்டும் உன்
அன்பை அனுபவிக்கிறேன்
உன்னுடன் கலந்து
ஆனந்தமாக உயிர்பிரிந்து
மீண்டும் உடல் சேரும்
இன்ப அவஸ்த்தையாய்.........

No comments:

Post a Comment