Tuesday 28 July 2015





உன் தோளைச்சற்றுகொடு
நான்சாய்ந்து கொள்ள 
ஆறுதலாக 
என்னைத்தட்டிக்கொடு 
மனம் விட்டு அழுதுகூட 
ரொம்பநாளாகிவிட்டது
சற்று அழுதுதீர்க்கிறேன் 
என் சோகங்களைச்சொல்லி
என் விழிநீர்துடைத்து 
ஆறுதலாக 
என் விழிகளில் முத்தமிடு
தோள்தொட்டு மனபாரம்நீக்கு 
இதற்குத்தான் காத்திருந்தேன் 
யுகம் யுகமாய் 
இருண்டுகிடக்கும் 
என் வாழ்க்கைக்கு 
உன் ஒளிக்கதிர்களைப்பாய்ச்சு 
ஓடி ஒளியட்ட்டும் 
அந்த அடர் இருள்......
எங்கிருந்தாய் இத்தனைநாளாய் 
என்னை இன்று ஆட்கொள்ள
என் தவம் ஈடேற,,,,,

No comments:

Post a Comment