Tuesday 28 July 2015





நீ
இறுக அணைக்கும் வேளைகளில்
நொறுங்கிப்போகின்றன 
என் துயரங்கள் 
விழிகளைத்துடைக்கும்போது 
வழிந்துவிடுகின்றன 
என் துயரக்குளங்கள் 
உன்வார்த்தைகள் 
ஒவ்வொன்றும் 
என் துயரங்களை
தோண்டிஎடுத்து வெளியே 
எரிக்கின்றன 
உன் அருகாமையெ
எனக்கு ஆறுதலாக 
அதுவே நீ 
இல்லாதபொழுதுதுகளில் 
சுடும் சோதனைகளாக
புடவையின் தலைப்புபோல்
எப்போதும் 
எல்லையில் நிற்கும்
அன்புத்தொல்லையாக
இன்ப அவஸ்த்தையாக
மனதை இறுக்கும் 
உள்ளாடை முடிச்சாக 
ஆறுதல் தரும் 
அதில் படிந்தைஈரமாக
எப்போதும் என்னுடனே நீ.
என் உயிராகாவே........

No comments:

Post a Comment