Tuesday 28 July 2015

மலர்படுக்கை விரித்து
மயிலிறகால் வருடுகிறாய்
மனம் தவிக்கவைத்து
கனம்சேர்க்கிறாய்
கூசாத இடங்களையும்
கூசவைக்கிறாய்
கூசுமிடங்களில்
முதமிடுகிறாய்
பேசுமிதழ்களில்
காதல் விசமூட்டுகிறாய்
கண்களை மூடவைத்து
காதல் கண் திறக்கிறாய்
ஊடல் செய்து 
தீமூட்டுகிறாய்
உள்ளேபுகுந்து 
கலகம்செய்கிறாய்
பாடல் வரிகளை
செயலாக்குறாய்..
பக்கம் வந்து 
அணைத்துகொள்கிறாய்
தேடல் வேலைகளை
தெளிவாகச்செய்கிறாய்
தென்றாலாய் என்னை
வருடிக்கொல்கிறாய்
எல்லாக்கலைகளும்
கற்றுவைத்திருக்கிறாய்
என்னிடம்தான் அதை
சோதனைசெய்கிறாய்
என்னை உன் 
சோதனைபொருளாக்கி
சாதனையால் என்னை
கொள்கிறாய்........

No comments:

Post a Comment