Tuesday 28 July 2015

நான் சற்றும் உன்னை
எதிர்பாராத அந்த நேரத்தில்
என்னடா இப்படி
செய்துவிட்டாய்என்னை
நிலை குலந்து 
உடல் வியர்த்து
தொண்டை உலர்ந்து
போகும்படி ஆக்கிவிட்டாய்
கைதேர்ந்த திருடன்நீ
ஒருவருக்கும் தெரியாமல்
கூட்டத்தில் கை பிடித்து
அழுத்துகிறாய்
ஒன்றுமேஅறியாத 
முகபாவனையுடன்
என்னை அந்தகணம்
நிலை குலையவைத்துவிட்டாய்
பின் வழிப்போக்கன்போல
என்ன ஆனது என்று
விசாரணைவேறு
கொன்றிருப்பேன் உன்னைஅப்போது
ஆனால் இப்போதுஅந்த கை யை 
பார்த்துபார்த்து மகிழ்கிறேன்
மீண்டும் அந்தவழியில்
பயணம் செய்து பார்க்கிறேன்
திரும்ப நீ என்
கைபிடிக்க மாட்டாயாஎன்று
பாடா படுத்துகிறாயடா
கள்வனே

No comments:

Post a Comment