Tuesday 31 March 2015

எனது சிறகுகளை
விமர்ச்சனக்கல்லெறிந்து
சிதைக்க முற்படுகிறாய்
இயலாது தோல்வியுற்று
துயருறும் வேலைகளில்
மீண்டும் வன்மத்துடன்
திட்டமிடுகிறாய்
தீய்த்துவிடும்
சாத்தியங்களை..
உயரேபறக்கும் வேளைகளில்
சூர்யக்கதிர்களால்
சுட்டெரிந்துவிட
ஆவலுறுகிறாய்
எப்படியேனும்
உன்னைத்தாண்டி
ஒரடி உயரம்கூட
ஏற்கும் மனமில்லை
வானவில்லில் 
நான் முத்தமிட்டாலும்..

No comments:

Post a Comment