Monday 16 February 2015

சாலையிலிருந்த
சரலைகற்களே
என்னை கவனமாக
நடக்கக்கற்பித்தன
ரோஜாவிலிருந்த முட்களே
என்னை கவனமாக
பறிக்கக்கற்றுக்கொடுத்தன
சங்கடங்களே என்னை
சவாலுக்குத்தயார்செய்தன
என்னைவென்றவர்களே
எனது வளர்ச்சிக்கு
நீரூற்றினர்
என்னைத்தோல்விக்குத்
தள்ளியவர்களே
அவர்களையறியாமல்
முன்னேற்றத்திற்கு
முன் தேதியிட்டனர்
என்னை
அவமானப்படுத்தியவர்களே
அவர்களே அவர்களைஅறியாமல்
அரியணையை தயார்செய்தனர்
என்மேல் கல்லெறிந்தவர்கள்தான்
என் கோட்டைக்கு
ஜல்லிகற்கள்
வழங்கினார்கள்.....
அவர்களுக்குத்தான்
நன்றிகளை கல்வெட்டில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதையாக......என்
கதையை.......

No comments:

Post a Comment