Saturday 8 November 2014

உன் வார்த்தைபோல் யாரும்


என்னோடுபேசவில்லை


உன்பார்வைபோல் எந்தபார்வையும்


பாதித்ததில்லை


உன் நினைவுபோல் எந்தநினைவும்


என்னை ஆட்கொண்டதில்லை

உன் கனவுபோல் எந்தகனவும்

என் உறக்கம்தின்றதில்லை

உன் அருகாமைபோல்

எதுவும் நிம்மதி அளித்ததில்லை

உன் பிரிவுபோல் எதுவும்

என்னைக்கொன்றதில்லை

உன் விழிநீர்போல்

எதுவும் என்னை நனைத்ததில்லை

உன்நினைவைச்சுவைப்பதுபோல்

எதுவும் சுகமில்லை

உன்னோடு வாழாதவாழ்க்கை

எனக்கு வாழ்க்கையே இல்லை

மிஸ்ஸிங் யூ................

No comments:

Post a Comment